Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினி, அஜீத், சூர்யா.. ராஜமெளலியின் விருப்ப பட்டியல்.. அப்ப விஜய்??
சென்னை: தமிழில் ரஜினி, அஜீத், சூர்யா போன்றோரை இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், பாகுபலி தமிழ் பதிப்பின் டிரைலர் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் தமிழில் எந்த நடிகரை இயக்க ஆசை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு ராஜமௌலி அளித்த பதில் பின்வருமாறு :-
பர்ஸ்ட் ரஜினி தான்...
"எந்த இயக்குநரைக் கேட்டாலும் முதலில் ரஜினி சார் பெயரைத் தான் சொல்லுவார்கள். எனக்கு ரஜினி சாரை இயக்கும் ஆசை இருக்கிறது.
அஜீத்தும், சூர்யாவும்...
எனக்கு சூர்யா சாரும் நெருக்கமான நண்பர். இரண்டு முறை அஜித் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அஜித் ஒரு நல்ல மனிதர்.
ஆசை...
இவர்கள் அனைவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
கதை தான் முக்கியம்...
கதை தான் மிகவும் முக்கியம். அவர்களிடம் சென்று இந்த மாதிரியான கதை பண்ணலாமா என்று தான் கேட்க வேண்டுமே தவிர, நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாமா என்று கேட்கக் கூடாது" என இவ்வாறு அவர் பதிலளித்தார்.
அப்ப விஜய் சார்.. வேண்டாமா சார்?
எல்லாம் சரி மெளலி சார்.. இளைய தளபதி என்று ரசிகர்களால் போற்றப்படும் விஜய் குறித்து ஒரு வார்த்தை இல்லை, அரை வார்த்தை கூட சொல்லலையே சார்.. ஏன் சார்??