பாகுபலி சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் 4 மாதங்களானது! - இயக்குநர் ராஜமௌலி

By Manjula

ஹைதராபாத்: ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே உலக அளவில் கவனம் ஈர்க்க முடியுமா? ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே அது சாத்தியம் தென்னிந்தியப் படங்களால் அதெல்லாம் முடியாது என்ற வழக்கத்தை பாகுபலி மூலம் உடைத்துள்ளார் ராஜமவுலி.

கமர்ஷியலின் சினிமாதான் இவர்களுக்குத் தெரியும் என்று தெலுங்கு சினிமா மீது விழுந்த முத்திரையை மாற்றி, இந்த சரித்திரப் படம் மூலம் வேறொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

Baahubali’s War Scene's More Than 4 Months Shooting – S.S.Rajamouli

பாகுபலியின் எத்தனை பிரமாண்டமானது தெரியுமா? இதோ, இயக்குநர் ராஜமவுலியின் வார்த்தைகளில்...

"படிக்கும் போதே வரலாற்று கதைகளின் மேல் ஆசை அதிகம், ஆனால் இயக்குனரான உடனேயே சரித்திரக் கதைகளை எடுக்க முடியாது என்பதற்காக இத்தனை வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது. இப்பொழுது பாகுபலியின் மூலம் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை படம் பிடிப்பதற்கு 4 மாதங்களை செலவிட்டுள்ளோம். 2000 பாடிபில்டர்களை வைத்து படம் பிடித்தது மறக்க முடியாத அனுபவம், படத்தின் ஹீரோ பிரபாஸ்தான் என்றாலும் அவருக்கு சரிசமமான வில்லனாக ராணாவுக்கும் படத்தில் முக்கியப் பங்குள்ளது."

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X