Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குடிக்கு அடிமையான விருச்சிக காந்த்துக்கு மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை!
சென்னை: மீட்கப்பட்ட விருச்சிககாந்த் என்கிற நடிகர் பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் விருச்சிககாந்தாக நடித்தவர் பல்லு பாபு. தாய், தந்தை இறந்த பிறகு மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
அவரை நடிகர் தீனாவும், இயக்குனர் மோகனும் மீட்டனர்.
பாபு
நடிகர் தீனா பாபுவை அழைத்துச் சென்று வீட்டில் தங்க வைத்தார். பின்னர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, உடை, செல்போன் எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
குடிப்பழக்கம்
இரவு 8 மணியானால் பாபு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் எங்கே செல்கிறார் என்று பார்த்தால் ஒயின் ஷாப்புக்கு சென்று அங்கு வருபவர்களிடம் காசு கேட்டு மது அருந்தியுள்ளார்.
ஒயின்
பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை தீனா புரிந்து கொண்டார். குடித்த பிறகு பாபு சுவரை பார்த்து அவராக பேசுகிறாராம். அவர் ஆளே மாறி நடந்து கொள்கிறாராம்.
|
மறுவாழ்வு
தீனாவும், மோகனும் சேர்ந்து பாபுவை நாப்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். பாபுவை ஒரு மாதத்தில் குணப்படுத்திவிடலாம் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவை இயக்குனர் மோகன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர்
பாபுவின் நிலைமை பற்றி அறிந்து 25 இயக்குனர்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த பிறகு பாபு நிச்சயம் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.