சீன, ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது பாகுபலி
தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாகவும், இந்தி, மலையாளத்தில் டப் செய்யப்பட்டும் வெளியாகி, வசூலில் புதிய சாதனைப் படைத்து வரும் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்தை அடுத்து, சீன மற்றும் ஆங்கில மொழிகளில் டப் செய்து சீனா உள்ளிட்ட நாடுகளில் வெளியிடவிருக்கின்றனர்.
பாகுபலி படம் இதுவரை ரூ 500 கோடிக்கு மேல் குவித்து வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது.

இன்னும் கூட தமிழகத்திலும் இந்தியாவின் பிற பாகங்களிலும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாகுபலியின் ஆதிக்கம் தொடர்கிறது.
இந்தப் படத்துக்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ள பேராதரவைக் கண்ட ராஜமவுலி, சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் டப் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்த டப்பிங் வடிவம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்றும் சில காட்சிகளை இன்னும் ட்ரிம் பண்ணப் போவதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாகுபலியின் புதிய பதிப்பை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப் போவதாக அவர் தெரவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











