பாகுபலி ட்ரைலர்... 17 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்!
எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி பட ட்ரைலர் இணையத்தைக் கலக்க ஆரம்பித்துள்ளது.
ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்துக்குள் இந்தப் படம் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் வேறு எந்தப் படத்தின் ட்ரைலரையும் இத்தனை பேர் பார்த்ததில்லை.

பாகுபலி ட்ரைலர் நேற்று காலை 10.30 மணிக்கு ஆந்திரா - தெலுங்கானாவில் உள்ள ஆயிரம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது. இதனைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
நேற்று மாலை ட்ரைலரை ஆன்லைனில் வெளியிட்டனர். வெளியான 24 மணி நேரத்துக்குள் சுமார் ஒரு மில்லியன் பேர் ட்ரைலரைப் பார்த்துள்ளனர்.
இந்த ட்ரைலர் இந்திய சினிமாவை சர்வதேச அளவில் பெருமையாகப் பேச வைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ட்ரைலர் பார்த்த திரைப் பிரபலங்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











