தாரை தப்பட்டை கவிழ்த்தும் கூட தஞ்சாவூரை விட்டுத் தராத பாலா!
இயக்குநர் பாலா தஞ்சையில் இருக்கும் கரகாட்டக்காரர்களை மையமாக வைத்து தாரை தப்பட்டை படத்தை இயக்கினார். எடுக்க நினைத்தது வேறு... வெளியில் வந்தது வேறு போலிருக்கிறது. படம் படுதோல்வியடைந்தது. இருந்தாலும் கூட மீண்டும் தஞ்சைக்கே செல்கிறாராம்.

பாலா அடுத்து இயக்கும் படம் நாச்சியார். ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் இந்த படத்துக்காகத்தான் தஞ்சாவூர் செல்லவிருக்கிறார். பத்து நாட்கள் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்த திட்டமாம்.

தாரை தப்பட்டை தோல்வியால் செண்டிமெண்டாக அங்கே இனி படப்பிடிப்பு வைக்க மாட்டார் என நினைத்தவர்கள், பாலா இப்படித்தான் எப்பவுமே.. பாராட்டுகிறார்களாம்.
நாச்சியாருக்கு இசை இளையராஜா.
Comments


Click it and Unblock the Notifications