Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தாரை தப்பட்டையைத் தொடர்ந்து மல்டி ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பாலா
சென்னை: தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா அடுத்ததாக முன்னணி நடிகர்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பரதேசி படத்தைத் தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் தற்போது மும்முரமாக பாலா இறங்கி இருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.
இப்படம் இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப் படமான குற்ற பரம்பரை கதையின் மையக்கருவை தழுவி உருவாகலாம் என்று கூறுகின்றனர். சேது, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் விக்ரமுடன் மீண்டும் பாலா கைகோர்க்கலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளையர்கள் ஆட்சியின்போது வாழ்ந்த மரபுப் பழங்குடியினர் பற்றிய படமாக இப்படத்தின் கதை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமர்சகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற அவன் இவன் மற்றும் நான் கடவுள் பாணி வகையில் இப்படத்தினை பாலா எடுக்கவிருக்கிறாராம்.
விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.