Just In
- 4 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 26 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 35 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 51 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
Don't Miss!
- News
இதான் சீமான்.. "பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- Automobiles
ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் இசைக் கலைஞர்: பிரபலங்கள் அதிர்ச்சி

மும்பை: பெங்களூரை சேர்ந்த இசைக் கலைஞர் கரண் ஜோசப் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரை சேர்ந்தவர் பியானோ இசைக் கலைஞரான கரண் ஜோசப்(29). 5 வயதில் இருந்து பியானோ வாசித்து வந்தார். அவர் பெங்களூர் ஸ்கூல் ஆப் மியூசிக், ராயல் ஸ்கூல் ஆப் மியூசிக், ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ காலேஜ் ஆப் மியூசிக்கில் இசை பயின்றவர்.
பிரபல இசை ஜாம்பவான்களிடம் இசை கற்றவர்.

மும்பை
இசை துறையில் மேலும் சாதிக்க மும்பை சென்றார் கரண். தனது நண்பர் ரிஷி ஷாவுடன் சேர்ந்து மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள கன்கார்ட் அடுக்குடுமாடி குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்தார்.
|
தற்கொலை
சனிக்கிழமை காலை நண்பர்களுடன் சேர்ந்து டிவி பார்த்துள்ளார் கரண். திடீர் என்று அவர் ஜன்னல் அருகே சென்று கீழே குதித்துவிட்டார். உடனே அவரது நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மரணம்
கரணை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் எதற்காக இந்த முடிவு எடுத்தார் என தெரியவில்லை.
|
போலீஸ்
கரணின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கரண் பிரபல பாடகர் விஷால் டட்லானியின் இசைக்குழுவில் பணியாற்றுள்ளார். கரணின் மரணம் குறித்து அறிந்த விஷால் அதிர்ச்சி அடைந்துள்ளார். கரண் ஒரு ஜீனியஸ் என்று தெரிவித்துள்ளார் விஷால்.
|
இரங்கல்
கரண் ஜோசபின் மரணம் குறித்து அறிந்த இசைத் துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேட் ஃபிங்கர்ஸ் இசைக்குழுவில் பணியாற்றிய கரண் ஒரு மேதை என்கிறார்கள்.

நண்பர்
கரண் சனிக்கிழமை காலை 5. 40 மணிக்கு தன்னை அடித்து நொறுக்குகிறார்கள் என்றும், தன்னை காப்பாற்றுமாறும் நண்பர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.