Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி
திருவனந்தபுரம்: தயாரிப்பாளர் நவீனுடன் திடீர் என ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது ஏன் என்பது குறித்து நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள நடிகை பாவனாவும், கன்னட பட தயாரிப்பாளரான நவீனும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் உள்ள பாவனாவின் வீட்டில் வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இது குறித்து பாவனா மலையாள செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நவீன்
நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் பெண் பார்க்கும் சம்பிரதாயத்திற்காக எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இருவீட்டாரும் இருந்த சமயத்தில் மோதிரம் மாற்றிக் கொள்ளலாமே என்ற பேச்சு கிளம்பியது.
நிச்சயதார்த்தம்
மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியதால் தான் நிச்சயதார்த்தம் திடீர் என்று நடந்துவிட்டது. திடீர் என நடந்ததால் நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரிவிக்க முடியவில்லை.
திருமணம்
எனக்கு திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் நடந்தது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் நிச்சயதார்த்த புகைப்படம் கசிந்து அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்று பாவனா தெரிவித்துள்ளார்.
மஞ்சு
நிச்சயதார்த்தத்திற்கு பாவனாவின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் மஞ்சு வாரியர், சம்யுக்தா வர்மா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் அடிக்கடி பாவனா வீட்டிற்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.