Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள டி.வி. நடிகை புவனேஸ்வரி நீதிமன்றத்தில்அபராதம் கட்ட மறுத்து விட்டார். தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை வடபழனியில் ஓடும் காரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக புவனேஸ்வரி அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார்.
அவருடன் சேர்த்து மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போது புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
கடந்த 11ம் தேதி குற்றப்பத்திரிக்கையின் நகல்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புவனேஸ்வரியுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்ட கலையரசி, விஜய் ஆனந்த் ஆகியோர் தங்கள் தவறை ஒப்புக் கொள்வதாகக் கூறினர்.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயபாலன். ஆனால்புவனேஸ்வரியும் கைது செய்யப்பட்ட மற்றொருவரான ராஜசேகர் என்பவரும் தங்கள் தவறை ஒப்புக் கொள்ளமறுத்து விட்டனர்.
"நாங்கள் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை. போலீசார் எங்கள் மீது பொய் வழக்கைப் போட்டுள்ளனர். இந்த வழக்கைஎதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடுவோம்" என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து வரும் 28ம் தேதி போலீஸ் சாட்சி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிஉத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த புவனேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில்,
நான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு போட்டுள்ளனர். இது என் மீது போலீசார் போட்ட பொய் வழக்கு.
கடவுள் அருளால் இவ்வழக்கிலிருந்து நான் விடுபடுவேன். போலீசாரின் பொய் வழக்கை உடைத்து நான் நிரபராதிஎன்பதை நிரூபிப்பேன் என்று கோபத்துடன் கூறினார் புவனேஸ்வரி.