Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
5 ஸ்டார் ஹோட்டலில் மயக்க மருந்து கொடுத்து என்னை ஏதோ செய்துவிட்டார்கள்: நடிகை புகார்
ஜெய்பூர்: பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மாடல் பூஜா மிஸ்ரா தனக்கு யாரோ குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி விட்டதாக ராஜஸ்தான் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த மாடல் பூஜா மிஸ்ரா. டிவி நிகழ்ச்சிகளில் வந்துள்ளார். பாலிவுட் படங்கள் சிலவற்றில் குத்தாட்டம் போட்டுள்ளார். ஆனால் சல்மான் கான் நடத்திய பிக் பாக்ஸ் 5 ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் பூஜா காலண்டர் ஒன்றுக்காக போட்டோஷூட் நடத்த ராஜஸ்தான் சென்றார்.
ராடிசன் ப்ளூ
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ராடிசன் ப்ளூ என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் பூஜா. அந்த ஹோட்டலில் தங்கி அவர் போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவரை புகைப்படம் எடுத்த கலைஞர் கிளம்பிச் சென்றுவிட்டார்.
பாலியல் தாக்குதல்
ஹோட்டலில் தான் குடித்த குளிர்பானத்தில் யாரோ மயக்க மருந்தை கலந்து கொடுத்ததாகவும் அதை குடித்துவிட்டு அறைக்கு சென்ற தான் மயங்கிவிட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார்.
கண் விழித்து பார்த்தபோது
காலையில் கண் விழித்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது போன்று உணர்ந்ததாகவும், தனது பொருட்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா
தனக்கு நேர்ந்த கதிக்கு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, அவரது தாய் பூனம் சின்ஹா, இந்தி நடிகை இஷா கோபிகர் உள்ளிட்டோர் தான் காரணம் என பூஜா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பொறாமை
தன் மீதுள்ள பொறாமையாலும், தன்னுடன் நேருக்கு நேர் மோத துணிச்சல் இல்லாததாலும் சோனாக்ஷி இவ்வாறு செய்துவிட்டதாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகம் தனக்கு எதிராக சதி செய்து வருவதாக கூறுகிறார் பூஜா.
வழக்கு
பூஜா அளித்துள்ள புகாரின்பேரில் உதய்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூஜா சோனாக்ஷி, இஷா தவிர மேலும் ஒரு பெரும் புள்ளியை பற்றியும் புகார் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.