Don't Miss!
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'போங்க பாஸ்... நீங்களும் உங்க டாஸ்க்கும்... செம போர்!'
ஓவியா இல்லாதது எவ்வளவு பெரிய நஷ்டம் என்று பிக் பாஸை உணர வைத்துவிட்டன கடந்த மூன்று நாள் பெரிய வீட்டு நிகழ்வுகள். டாஸ்க் என்ற பெயரில் பிக் பாஸ் தரும் வேலைகளும் ரசிக்கிற மாதிரி இல்லாததால், 'ஃபாஸ்ட் ஃபார்வர்டு' பண்ணும் வசதி இல்லையே என பார்வையாளர்களை நினைக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய சுவாரஸ்யமே ஓவியாவின் இயல்பான நடவடிக்கைகள்தான். அத்தனை அழுகுணிகளுக்கும் நடுவில் ஓவியா மட்டும் இயல்பாக தனித்து நின்றதால் அவரை அத்தனைப் பேரும் ரசித்தனர். சமயத்தில் பிக் பாஸின் உத்தரவுகளுக்கே 'முடியாது' என்று சொல்லிவிட்டு அசால்டாக நின்றார் ஓவியா.
ஓஓஓவியா
ஆனால் காயத்ரி, ஆரவ், சக்தி, நமீதா, ஜூலி போன்றவர்கள் ஓவியாவைத் தனிமைப்படுத்தினர். அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இதனால் மன அழுத்தம் தாங்காமல் வெளியேறிவிட்டார் ஓவியா.
இப்போது ஓவியா வெளியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இதில் இரண்டு நாட்கள் அவரைப் பற்றியே ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்ததால் ஓரளவு பெரிய வீட்டைக் கவனித்தனர்.
காயத்ரி சீன்
ஆனால் திங்கள், செவ்வாய் இரு தினங்களுமே பார்க்க அங்கே ஒன்றுமே இல்லை. குறிப்பாக திங்கள்கிழமை அன்று கமலுக்கு எதிராக காயத்ரி போட்ட சீன் மிச்ச மீதியிருந்த பார்வையாளர்களையும் விரட்டிவிட்டது.
இது என்ன டாஸ்க் பாஸ்?
செவ்வாய்க்கிழமை துணி துவைக்கிற டாஸ்க். இதில் பெரிய சுவாரஸ்யம் என எதுவுமே இல்லை. காயத்ரியையெல்லாம் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது என சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தார்கள். பி வாசு மகன் சக்தி வெளியில் வந்தால் பாதுகாப்பாக வீட்டுக்குப் போக முடியுமா தெரியவில்லை. அத்தனை வெறுப்பைச் சம்பாதித்துள்ளார் இந்த பிக் பாஸ் மூலம்.
சினேகன் பரவால்ல
சினேகன் பரவாயில்லை. கட்டிப்புடி வைத்தியம் ஒன்றைத் தவிர, வேறு எந்த வகையிலும் இப்போது எரிச்சலூட்டும்படி நடந்து கொள்ளவில்லை. ஒரிஜினல் லாண்டரிக்காரர் மாதிரியே நேற்று வேலை செய்தார்.
ரசிகர்கள்
பிக்பாஸுக்கு இப்போது ரசிகர்களின் வேண்டுகோளெல்லாம், 'இந்த மூஞ்சிகளைப் பார்க்கவே கடுப்பா இருக்கு... தயவு செய்து சக்தி, காயத்ரி, ஆரவ் ஆகிய மூவரையும் ஒரே நாளில் வெளியேத்திட்டு புது பிரபலங்களை அனுப்புங்க' என்பதுதான்.