காயத்ரி நல்லவராகிட்டாரா?: இது என்ன புது பெர்பாமன்ஸ் பிக் பாஸ்?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை தினம் தினம் அழ வைத்து டிஆர்பியை ஏற்றுகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் யாராவது சண்டை போடுகிறார்கள், அழுகிறார்கள். போட்டியாளர்களை அழ விட்டு அதை க்ளோசப்பில் காண்பித்தால் தானே டிஆர்பி ஏறும்.
அதை தான் சரியாக செய்து வருகிறார் பிக் பாஸ்.

ஓவியா
முன்பு பிக் பாஸ் வீட்டில் ஜூலி தினமும் அழுதார், டிஆர்பியும் எகிறியது. தற்போது அவரை பார்வையாளர்கள் கண்டுகொள்வது இல்லை என்பதால் பிக் பாஸின் கவனம் ஓவியா பக்கம் திரும்பியுள்ளது.

காயத்ரி
தற்போது பிக் பாஸ் வீட்டில் ஓவியா தினம் தினம் அழுகிறார். அனைவரும் கழுவிக் கழுவி ஊத்தும் காயத்ரி இன்று நல்லவர் போன்று ஓவியாவிடம் பேச அவர் ஃபீல் செய்து அழுகிறார்.

பிக் பாஸ்
எச்ச, சேரி பிஹேவியர் என்று மோசமாக பேசிய காயத்ரியை யாருக்கும் பிடிக்கவில்லை. கமல் ஹாஸனும் அவரை கண்டிப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் காயத்ரியை நல்லவர் போன்று காண்பித்துள்ளார் பிக் பாஸ்.
என்ன நடக்குது?
ப்ரொமோ வீடியோவில் காயத்ரி ஓவியாவிடம் நல்லவிதமாக பேசினாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை. காயத்ரியை காப்பாற்ற பிக் பாஸ் ஏதோ சூழ்ச்சி செய்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











