Just In
- 2 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 30 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் 3 வாய்ப்புக்காக படுக்கை: முதல்வரை சந்திக்கும் டிவி நடிகை
ஹைதராபாத்: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைக்கப்பட்டது தொடர்பாக பெரிய அளவில் போராட்டம் நடத்துவதுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து புகார் அளிக்க உள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை படுக்கைக்கு அழைத்துள்ளனர்.
அதன் பிறகு அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

ஸ்வேதா ரெட்டி
என்னை ஒரு போட்டியாளராக ஆக்குகிறேன் என்று கூறிவிட்டு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி ஸ்வேதா ரெட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதை கண்டித்து அமராவதி, விஜயவாடா மற்றும் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்.

முதல்வர்
பிக் பாஸ் விவகாரம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தச் செய்யும் வகையில் ஸ்வேதா ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளார். பாலியல் தொல்லைக்கு எதிரான ஸ்வேதா ரெட்டியின் போராட்டத்திற்கு பல பெண்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து அவரை ஊக்குவித்துள்ளன.

போராட்டம்
டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடக்கும் விஷயங்களை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். நான் நியாயம் கேட்டு போராடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வேதா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாகர்ஜுனா
முன்னதாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் முன்பே அதை கண்டித்து நாகர்ஜுனாவின் வீட்டிற்கு முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் விஜயவாடாவிலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு எதிராக நேற்று போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஒவ்வொரு சீசனிலும் போராட்டம் நடக்கத் தான் செய்கிறது.