Don't Miss!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக்பாஸ் மோதல்...இன்றைய ஸ்பெஷல் தாமரை – இசைவாணி
சென்னை : விஜய் டிவி.,யில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக 46 வது நாளை எட்டி உள்ளது. தற்போது போட்டியாளர்களாக 12 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இவர்களில் இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார ஆளுமை திறன் வருணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.
முழுக்க கிராமத்தானாக மாறிவிட்டேன்... தாடி வளர்த்ததன் ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!
தினமும் சண்டை
கடந்த மூன்று நாட்களாக லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் நிரூப் - வருண் மோதல் நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று ராஜு - பாவ்னி இடையே சண்டை நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று தாமரை - இசைவாணி இடையே மோதல் நடைபெற்றுள்ளது.
இசைவாணியை கமெண்ட் செய்யும் தாமரை
46 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில் இசைவாணியின் கண்ணாடியாக இருக்கும் தாமரை, அவரை பற்றி சொல்கிறார். அப்போது இசைவாணி அழுதபடி, கையை உதறி விட்டு செல்கிறார். இதனால் தாமரை, இசைவாணி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
உன்னை பற்றி சொல்ல ஒன்றுமில்லை
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதில் இசைவாணி, மனசாட்சியோடு சொல்லு. நீ நக்கலா பண்ணுனியா. சந்தோஷத்திற்காக பண்ணுனியா என தாமரையை பார்த்து கேட்கிறார். அதற்கு தாமரை, நான் என் சந்தோஷத்திற்காக தான் பண்ணுனேன். உன்னை பற்றி பேச அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்கிறார்.
கடுப்பாகும் தாமரை
அதற்கு இசைவாணி, அதை நீ சொல்ல கூடாது. பார்க்குற மக்களுக்கு தெரியும் என்கிறார். பதிலுக்கு தாமரையும், மக்கள் உன்னை மட்டும் இல்லை. என்னையும் தான் பார்க்கிறார்கள். நிறைய விஷயம் நான் அடிபட்டிருக்கிறேன். என்னால் மனசாட்சியை கொன்றுவிட்டு வாழ முடியாது என கோபமாக சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து செல்கிறார்.
இசைவாணியை வெளியேற்றுங்க
இந்த ப்ரோமோக்களை பார்த்து விட்டு, தொட்டா சிணுங்கி இசைவாணி. 45 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இன்னமும் சூடாக ஏதும் நடக்கவில்லை. இருந்தாலும் மற்ற சீசன்களை விட இந்த சீசனில் பெரும்பாலானவர்கள் தங்களின் தனித்தன்மையை காட்டி விளையாடுவதை பார்க்க நன்றாக உள்ளது. இசை நீ வெளிய போம்மா என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.
ரெண்டு பேரையும் வெளியேத்துங்க
இன்னும் சிலர், பேசாம இரண்டு பேரையும் வெளியேற்றி விடுங்கள். இரண்டு பேருமே கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும். ஒன்னுக்கு ஒன்னு சளச்சது இல்ல. அந்த தாமரையை சட்டுபுட்டுன்னு வெளிய அனுப்புங்கப்பா. இந்த சண்டையை பார்க்கவே கடுப்பா இருக்கு. தினமும் யாராவது சண்டை தானா என பலரும் கேட்டுள்ளனர்.