Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கபட நாடக வேடதாரி யார்? விக்ரமனுக்கு சரியான நோஸ்கட் கொடுத்த கமல்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் 60 நாட்களுக்கு பிறகும் கபட நாடக வேடதாரியாக இருப்பவர் ரச்சித்தா, விக்ரமன் என அனைத்துப் போட்டியாளர்களும் ஒட்டுமொத்தமாக கூறியுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு பாத்திரமாக வந்து ஹவுஸ்மேட்ஸ்களை மகிழ்விக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கடந்த சீசனிலேயே இந்த டாக்ஸ் செம கடுப்பாக இருந்த நிலையில் இந்த முறையும் அதை டாஸ்க்கை கொடுத்து ரசிகர்களை மேலும் கடுப்பாக்கி உள்ளார் பிக் பாஸ்.
உடல் எடையை குறைத்து கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஐஸ்வர்யா தாத்தா!
இந்த வார டாஸ்க்
இந்த டாஸ்கில் இயல்பாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இருக்கும் கதாபாத்திரத்திற்கு பிக் பாஸ் சன்மானமும் வழங்கப்பட்டது. இந்த டாஸ்கில் அமுதவாணன் ரத்தக்கண்ணீர் நாடகத்தை நடத்தி ஸ்கோரை அள்ளினார். மேலும், ரச்சித்தா,மைனா ஆகியோருக்கு விருது கொடுக்கப்பட்டது. அமுதவாணன்,ரச்சித்தா, மைனா அடுத்து வாரம் தலைவர் டாஸ்கில் போட்டியிட உள்ளனர்.
அமுதவாணனை பாராட்டிய கமல்
இதையடுத்து, இன்று சனிக்கிழமை என்பதால் கமல், புயல் மழைக்கு ஏற்றார் போல கதகதப்பான உடையில் வந்திருந்தார். வந்ததுமே அமுதவாணன் எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருந்ததை சுட்டிக்காட்டி அவரை பாராட்டினார். அதே போல ரச்சித்தா, மைனா என ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டுபாராட்டினார்.
கபட நாடக வேடதாரி யார்?
இதையடுத்து,பிக் பாஸ் வீட்டில் 60 நாட்கள் ஆகியும் உண்மை முகத்தை வெளியில் காட்டாமல் கபட நாடகம் போடும் வேடதாரி யார் என கமல் கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு பதில் சொல்லி நாடகமாடுபவரின் முகத்தில் மரு வைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. முதல் ஆளாக எழுந்த அசீம், ரச்சித்தாவின் உண்மை முகம் இது இல்லை அவர் உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார் என்றார். அதே போல ராம், ஷிவின் என பலரும் ரச்சித்தாவின் பெயரை கூறி மரு வைத்தனர்.
விக்ரமனன் நாடகமாடுகிறார்
அதேபோல, விக்ரமனன் இந்த வீட்டில் கேமிரா இருப்பதால் எப்போதும், நீதி, நேர்மை என்று பேசி வருகிறார். ஆனால் வெளியிலும் இவர் இப்படிதான் இருப்பார் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால், விக்ரமனன் கேமிராக்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றார் ஆயிஷா. இதை கருத்தை தனலட்சுமியும் கூறி அவருக்கு மரு வைத்தார்.
சரியான நோஸ்கட்
அப்போது குறுக்கிட்ட விக்ரமனன் நான் வெளியில் எப்படி பேசுவேன், நண்பர்களிடம் எப்படி நடந்து கொள்வேன் என்று உங்களுக்கு தெரியுமா, இல்லை என்னுடைய விவாத நிகழ்ச்சியை நீங்கள் பார்த்து இருக்கிறார்களா என கமலின் முன்பே ஆயிஷா, தனலட்சுமியிடம் கேள்வி எழுப்பினார் விக்ரமனன். அப்போது குறுக்கிட்ட கமல் மற்றவர்களையும் பேச விடுங்கள், மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள் என சரியான நோஸ் கட் கொடுத்தார். இதைக்கேட்ட ஆடியன்ஸ் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.