Don't Miss!
- News
அக்கு அக்கா உடையுதே "அச்சாணி".. எடப்பாடிக்கு விழுந்த "அடி".. இவ்ளோ இருக்கா.. திரும்புதா அதே ஹிஸ்டரி
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பைக்கில் உள்ளே வந்த மூவர்.. பாவனியை இப்படி பிக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களே.. 2வது ரன்னர் அப்!
சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் 2வது ரன்னர் அப்பாக வெளியேறினார் பாவனி ரெட்டி.
கடந்த சீசனில் நடைபெற்றது போல முந்தய சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாருமே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இந்த முறை போட்டியாளர்களை அழைத்துச் செல்லவில்லை.
அதற்கு பதிலாக வேறு விதமாக ஒவ்வொரு போட்டியாளர்களாக எலிமினேட் செய்யப்பட்டனர்.
பழைய
சாதத்தை
பரிமாறும்
பிக்
பாஸ்..
மீண்டும்
மீண்டும்
பயண
வீடியோவா..
அட
போங்க
பாஸ்
முடியல!

5வது இடத்தில் நிரூப்
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை 6.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அதில், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து நிரூப் நந்தகுமார் கண்ணைக் கட்டியபடியே வெளியேற்றப்பட்டார். டாப் 5 ஃபைனலிஸ்ட்டாக இடம்பெற்ற நிரூப் 5வது இடத்தில் வெளியேறினார்.

அமீருக்கு ஏமாற்றம்
அமீர் தான் அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளார் என கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நிரூப் வெளியேறிய நிலையில் 4வது இடத்தில் ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்து அமீர் வெளியேற்றப்பட்டார். தனது எலிமினேஷனை சற்றும் அமீர் எதிர்பார்க்காத நிலையில், பலத்த ஏமாற்றம் அடைந்தார்.

இரண்டாவது ரன்னர் அப்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அழகு பதுமையாக கலந்து கொண்ட பாவனி மொழி தடைகளை தாண்டி 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதித்து விட்டார். அபிநய் உடன் லவ் டிராக், அமீருடன் முத்த சர்ச்சை என ஏகப்பட்ட அப்ஸ் அண்ட் டவுன்ஸ்களை கடந்த பாவனி இளைஞர்களின் மிகப்பெரிய சப்போர்ட் உடன் 2வது ரன்னர் அப் ஆகி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் பைக்
ஒவ்வொரு வெளியேற்றத்தையும் வித்தியாசமான முறையில் இந்த சீசனில் நடத்தினர். மூன்றாவது நபராக பாவனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற 3 பைக்குகள் பிக் பாஸ் வீட்டுக்கே வந்தன. அதில், ஃபைனலிஸ்ட்டான பிரியங்கா, ராஜு மற்றும் பாவனி ஏறிய ரவுண்ட் அடித்தனர்.

பைக்கில் பிக்கப்
மூன்று பைக்குகள் ரவுண்ட் அடித்த நிலையில், ஒரு பைக்கில் பாவனியை பிக்கப் செய்த நபர் அப்படியே அவரை வெளியே கொண்டு சென்று விட்டார். கமல் முன்னிலையில், வந்து நின்ற பாவனியிடம் கை விரல் எப்படி இருக்கிறது என விசாரித்த கமல் அவரை பாராட்டியது பாவனி ஆர்மியனரை உற்சாகப்படுத்தியது.