Don't Miss!
- News
"இன்னும் ஓரிரு வாரங்களில்.." நீட் விலக்கு குறித்து வந்து விழுந்த கேள்வி.. மா.சு சொன்ன முக்கிய தகவல்
- Sports
சச்சின் மகன் அர்ஜூன் தான் லக்கி..சிறு வயதில் புலம்பிய சர்பிராஸ் கான்..பிறகு உண்மையை புரிஞ்சிகிட்டாரு
- Finance
முதலீடு செய்யும் இந்த 5 தவறை செய்யுறீங்களா.. இது உங்களுக்கு தான் பிரச்சனை!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
கட்டப்பஞ்சாயத்து பண்ணாதீங்க..வரம்பு மீறி பேசிய அசீம்…கொந்தளித்த விக்ரமன்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், கட்டப்பஞ்சாயத்து பண்ணாதீங்க என்று வரம்பு மீறி பேசிய அசீமை விக்ரமன் கடுமையாக கண்டித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இப்போது 10போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நாட்கள் நெருங்க நெருங்க டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பிக்பாஸ் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இந்த சீசனின் வலுவான போட்டியாளராக அசீம், விக்ரமன், ஷிவின், தனலட்சுமி இருக்கிறார்கள். இதில் அசீம் மற்றும் விக்ரமன் வெற்றி பெற அதிகவாய்ப்பு இருக்கிறது.
போராடி கிடைத்த வெற்றி..பிக் பாஸ் வீட்டில் ஒலித்த “ஜெய்பீம்“..போராட்டம் எங்களுக்கு புதுசுஇல்லை!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கால்வாசி கிணறைத் தாண்டி விட்டது. அடுத்த மாதம் இந்த நேரத்திற்கு எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெற்றியாளர் யார், ரன்னர் அப் யார் என்று தெரிந்து விடும். இதனால், இனிமேல் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கும். டாஸ்க்குகள் அடுத்த வாரத்தில் இருந்து நிச்சயம் கடுமையாகவே இருக்கும்.

கனா காணும் காலங்கள்
கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீடு அமைதியாகவே இருந்தது, கடந்த வாரம் சொர்கம் நரகம் டாஸ்கும் இந்த வாரம் கனா காணும் காலங்கள் டாஸ்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ,பள்ளி மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் போட்டியாளர்கள் மாறினார்கள். இதையடுத்து, நேற்று 80ஸ் கல்லூரியாக மாற்றப்பட்ட பிக்பாஸ் வீட்டில் விதவிதமாக உடை அணிந்து போட்டியாளர்கள் அலப்பறை கொடுத்தனர்.

கொளுத்திப்போட்ட பிக் பாஸ்
இந்த வாரத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லாமல், அனைவரும் ஜாலியாகவே இருந்ததைப் பார்த்து கடுப்பாகிப் போன பிக் பாஸ், இன்றைக்கு ரேங்கிங் டாஸ்க்கை கொடுத்து பிரச்சனையை கொளுத்திப் போட்டுள்ளார். காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், பர்சர் அடித்ததும், அனைவரும் ரேங்கிங் நம்பர் முன் ஓடிவந்து நின்றுவிட கடைசியாக வந்த ஷிவின், ஏடிகேவிடம் பேசுவார். அப்போது ஏடிகே உனக்கு இந்த இடத்தில் இருக்க தகுதியே இல்லை என்ற ஆத்திரத்தில் கத்துகிறார்.

அவமானப்படுத்தக்கூடாது
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ கூடாது என அசீமை விக்ரமன் கண்டிக்கின்றார். அப்போது அசீம் பருப்புப் பஞ்சாயத்து என்று கூற,கடுப்பான விக்ரமன், இது உங்களுக்குரிய இறுதி எச்சரிக்கை, ஏற்கனவே மண்னை கவ்வியதை மறந்துவீட்டீங்களா அசீம், மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்ல.

கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க
விக்ரமன் இது பிக் பாஸ் வீடு, இங்க வந்து கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க என்று மீண்டும் மீண்டும் விக்ரமனை ஆத்திரம் அடையும் வகையில் அசீம் பேச, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற விக்ரமன், நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்தேன் என்று நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கத்துகிறார். அதற்கு அசீமும், எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினை முடிஞ்சுது, நீங்க எதற்கு இடையில வாறீங்க எனக் கேட்கிறார். காலையில் வெளியான முதல் ப்ரோமோவிலும் அசீம் மற்றும் விக்ரமனுக்கு சண்டை முட்டிக்கொண்டதால், இன்றைய எபிசோடு சும்மா தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசிவருகிறார்கள்.