எனக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடு.. ராஜுவிடம் செம ஜொள்ளு... நாளுக்கு நாள் டேமேஜ்ஜாகும் பிரியங்கா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ராஜுவிடம் தன்னை கட்டிப்பிடிக்குமாறு கூறி டேமேஜ் செய்து கொண்டார் பிரியங்கா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் விளையாடு இல்ல வெளியே ஓடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் சுவாரசியம் அற்றவர்கள், பகலில் தூங்குபவர்கள், மைக்கை சரியாக மாட்டாதவர்கள், அதிகம் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் என நான்கு பிரிவுகளின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஹெலோ மைக் டெஸ்ட்டிங்
இதில் மைக் மாட்டாதவர்கள் மற்றும் பகலில் அதிகம் தூங்குபவர்கள் என பிரியங்கா மற்றும் அபிஷேக்கின் பெயர்களை அதிகமாக கூறினர் ஹவுஸ்மேட்ஸ். இதனை தொடர்ந்து ஹெலோ மைக் டெஸ்ட்டிங் என்று போர்டு அபிஷேக் கழுத்தில் மாட்டப்பட்டு அதோட பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தார்.

கை விலங்கு மாட்டப்பட்டு
அவரை தொடர்ந்து இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்ற போர்டு நிரூப் மற்றும் பிரியங்காவின் கழுத்தில் மாட்டப்பட்டு இருவருக்கும் கை விலங்கு மாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நிரூப்பும் பிரியங்காவும் பெட்ரூம்முக்குள் சென்றனர். அப்போது தனக்கு பசிக்கிறது என்று கூறிய பிரியங்கா, ராஜுவை அழைத்து கலாய்த்தார்.

உண்மையாக வர்ணிக்க வேண்டும்
தன்னை நல்லப்படியாக வர்ணித்துவிட்டு தனக்கு ரசம் சாதமும் ஆம்லேட்டும் கொண்டு வருமாறு கூறினார். அதற்கெல்லாம் பிரியங்காவின் மனம் கோணாதப்படி ஓகே ஓகே என்ற ராஜு அவரை வர்ணித்து கவிதை கூறினார். அதற்கு உண்மையாக வர்ணிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார் பிரியங்கா. உண்மையாக எல்லாம் வர்ணிக்க முடியாது என்ற மொக்கை பண்ணினார் ராஜு.
Recommended Video

எனக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடு
இதனால் டென்ஷனான பிரியங்கா எனக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடு என ஓபனாக கேட்டார். இதனைக் கேட்ட ராஜு பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத்தான் தெரியும் சரி பரவாயில்லை என்று கூறி பெட்டில் ஏறி பிரியங்காவை கட்டிப்பிடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பிரியங்கா இப்படி ஆகிவிட்டார் என முகம் சுளித்தனர்.

பிடித்தவர்களுக்கு ஆம்லேட்
இதேபோல் பிக்பாஸ் வீட்டில் ஓ மணப்பெண்ணே புரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிஷங்கர் ஆகியோர் ஹவுஸ்மேட்டுகளை லைவ்வில் சந்தித்தனர். அப்போது அக்ஷரா மற்றும் நிரூப் ஆகிய இருவரும் ஆம்லேட் போட்டு பிடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுத்தனர்.

நிரூப்பிடம் சண்டை போட்ட பிரியங்கா
அப்போது நிரூப் தான் போட்ட ஆம்லேட்டை இமான் அண்ணாச்சிக்கு கொடுத்தார். இதனை பார்த்து செம காண்டானார் பிரியங்கா. பின்னர் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த பிரியங்காவிடம் பிடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் நீ என்னிடம் தானே கொடுக்க வேண்டும், எப்படி அண்ணாச்சியிடம் கொடுக்கலாம் என்று கேட்டு சண்டைப் போட்டார்.

வழியும் பிரியங்கா- எரிச்சலாகும் பார்வையாளர்கள்
ஏற்கனவே அக்ஷரா விஷயத்தில் பிரியங்கா மீது செம காண்டில் உள்ளனர் ரசிகர்கள். குரூப் சேர்த்துக்கொண்டு தான் தான் பிக்பாஸ் வீட்டின் முதலாளி என்பதை போல் நடந்து கொள்கிறார். இதனால் பிரபலங்கள் பலரும் பிரியங்காவை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். இந்நிலையில் இப்படி ஆண் போட்டியாளர்களிடம் அவர் வழிவது பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











