வடசென்னை சூட்டிங் ஸ்பாட்டில் பிந்து மாதவி கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி ஆளாக எலிமினேட் ஆனது நடிகை பிந்து மாதவி தான். ஆரம்பத்தில் அமைதியாக இருந்தது போலிருந்தாலும் போகப்போக அனைவருடனும் ஜாலியாக பொழுதைக் கழித்தார்.
கடைசி சில நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த ஐந்து பேரில் இவர் மட்டுமே பெண். இவரின் நடனத்திற்கு அங்கிருந்த போட்டியாளர்களும் கூட ரசிகர்கள் ஆனார்கள்.
எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பிந்து வெளியே சென்றது ரசிகர்களுக்கு சோகம்தான். ஆனாலும் தனது நண்பர்கள் ஆரவ், சினேகன், ஹரீஷ், கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றதில் பிந்துவுக்கு மகிழ்ச்சி.
வடசென்னை ஸ்பாட் :
இந்நிலையில் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. பிந்து மாதவி அங்கு சென்று ஐஸ்வர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் கூட ஒரு செல்ஃபி :
அப்டியே நம்ம தனுஷ் சார் கூட ஒரு செல்ஃபி எடுத்து போடுங்களேன். அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. ப்ளீஸ் மா!
வெய்ட்டிங்லயே வெறி :
வாவ்... ட்ரெடிஷனல் லுக்ல நார்த் மெட்ராஸ் பொண்ணு. வடசென்னை வெய்ட்டிங்லயே வெறி ஆகுதே!
ரொம்ப வருசமாச்சு :
ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்கக் கூடிய நடிகைனா கண்டிப்பா அது நீங்கதான். வாழ்த்துகள்..!
பிந்து மாதவி :
எல்லோரும் ஐஸ்வர்யாவையே சிலாகிச்சிக்கிட்டு இருக்கீங்க... பிக்பாஸ் போய்ட்டு வந்துருக்குற புள்ளைக்கும் வாழ்த்து சொல்லலாமே ப்ரெண்ட்ஸ்..


Click it and Unblock the Notifications











