Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிபாஷாவுக்கு திருமணப் பரிசாக... 10 கோடி ரூபாய் வீட்டைக் கொடுத்தாரா சல்மான் கான்?
மும்பை: தனது திருமணப் பரிசாக சல்மான் கான் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைப் பரிசாகக் கொடுத்ததாக எழுந்த வதந்திகளுக்கு, நடிகை பிபாஷா பாசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
ஜான் ஆப்ரஹாமை உருகி உருகிக் காதலித்த பிபாஷா தற்போது கரண் சிங் குரோவரின் மனைவியாகி இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இவர்கள் திருமண வரவேற்பில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் சல்மான் கான், பிபாஷா பாசுவின் திருமணப் பரிசாக 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தொடர்ந்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த வதந்திக்கு பிபாஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''இதுபோன்ற அபத்தமான செய்திகளை நான் படிக்க வேண்டி இருக்கிறது.
நான் ஏன் மற்றவர்களிடம் இருந்து பரிசுப்பொருளை வாங்க வேண்டும்?'' என்று கேட்டிருக்கிறார்.