Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தவறாக நடக்க முயன்றதால் படத்தில் இருந்து விலகினேன்.. முன்னணி தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்!
மும்பை: முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் அவர் படத்தில் இருந்து விலகினேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழிலும் நடித்துள்ளார்.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடித்த சச்சின் படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா லாக்டவுன் திருமணம்.. நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் இயக்குனரை மணந்த பிரபல நடிகை!

கரண் சிங் குரோவர்
இவர் 1996 ஆம் ஆண்டு நடிகர் டினோ மோரியாவை காதலித்து வந்தார். சில வருடங்கள் தொடர்ந்த இவர்கள் காதல் பிறகு முறிந்தது. அடுத்து ஜான் ஆபிரஹாமை காதலித்து வந்த பிபாஷா அவரிடம் இருந்தும் விலகினார். பிறகு அலோன் என்ற படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவர் மீது காதல் வயப்பட்டார். இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

தவறாக நடக்க முயன்றார்
இருவரும் இணைந்து டேஞ்சரஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளனர். விக்ரம் பட் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், 7 பாகங்களைக் கொண்டது. கடந்த 14 ஆம் தேதி இதன் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. இதில், சோனாலி ராவத், நடஷா சுரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியுள்ளார்.

கண்டு பயந்தார்கள்
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அப்போது நான் சினிமாவுக்கு புதிதாக வந்திருந்தேன். மும்பையில் தனியாக இருந்தேன். அதனால் எப்போதும் என்னைக் கடுமையாகக் காட்டிக்கொள்வேன். அதனால் என்னைக் கண்டு பயந்தார்கள். ஆனால், அப்படியும் எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. ஒரு முன்னணி தயாரிப்பாளரின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.

புன்னகை காணவில்லை
அந்த தயாரிப்பாளர்தான் அனுப்பி இருந்தார். அதில், உங்கள் புன்னகையை காண முடியவில்லை என்றும் இளமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறீர்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது. நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அதே குறுஞ்செய்தியை மீண்டும் அனுப்பினார். பிறகு நண்பருக்கு அனுப்பப்பட வேண்டிய, ஓர் ஆச்சரிய அனுபவத்தை பற்றிய விரிவான குறுஞ்செய்தியை அவருக்கு தவறாக அனுப்பிவிட்டேன்.

நடிக்க மாட்டேன்
அது வேலை செய்தது. அதை படித்தபிறகு அவரிடம் இருந்த எந்த செய்தியும் எனக்கு வரவில்லை. பிறகு என் செகரட்டரியை அழைத்து அவரிடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடுமாறும் இனி அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் சொன்னேன். பின்னர் அந்த தயாரிப்பாளரை ஒரு விழாவில் கண்டேன். என்னைப் பார்த்ததுமே அமைதியாக நடந்து சென்றார். அப்போது அவரைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இவ்வாறு பிபாஷா கூறியுள்ளார்.