Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினி படத் தலைப்பு.. கோதாவில் குதித்து 'வீரா'வைப் பிடித்த பாபி சிம்ஹா!
ரஜினி படங்களின் தலைப்புகளை முன்பு அவரது மருமகன் தனுஷ்தான் அடிக்கடி பயன்படுத்தி வந்தார். இப்போது அத்தனை நடிகர்களுமே கோதாவில் குதித்துவிட்டனர்.
சமீபத்தில் விஷால் பாயும் புலியை அனுமதி பெற்று பயன்படுத்தினார். அடுத்து அஜீத்தும் விஜய்யும் மூன்று முகம் தலைப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சைலன்டாக வீரா தலைப்பை கொத்திக் கொண்டுள்ளார் பாபி சிம்ஹா.
இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடைன்மென்ட்.
"திட்டமிட்டு நாங்கள் ரஜினி சாரின் இந்தத் தலைப்பை எடுக்கவில்லை. அது தானாக அமைந்தது. பாபி சிம்ஹாவின் தொழில் நேர்மைக்கு நாங்கள் தரும் பரிசு இந்த வீரா தலைப்பு. ரஜினி சார் படத் தலைப்பைவிட வேறு என்ன பெருமையை பாபி சிம்ஹாவுக்கு நாங்கள் தரமுடியும்," என்கிறார் எல்ரெட் குமார்.
நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த இந்தப் படத்துக்கு எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். வீரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கே ராஜாராமன்.
'ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தது வரும் கதா நாயகன் பாபி சிம்மாவுக்கு 'வீரா' மேலும் ஒரு மணி மகுடம் ஆக அமையும்,' என்கிறார் ராஜாராமன்.
"எனது நிறுவனம் சார்பாக பல் வேறு திறமையான புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் ராஜாராம் எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. புதிய நாயகி ஐஸ்வர்யா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன் இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்துக்கு மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது," என்றார் எல்ரெட் குமார்.