Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் இது பண்டிகைகளுக்கான நேரமல்ல- பாம்பே ஜெயஸ்ரீ
சென்னை: "சென்னையில் இது பண்டிகைகளுக்கான நேரமல்ல" என்று சிறந்த பின்னணிப்பாடகிகளில் ஒருவரான பாம்பே ஜெயஸ்ரீ தெரிவித்து இருக்கிறார்.
டிசம்பர் மாதம் வந்தாலே சென்னையில் இசைக்கச்சேரி களைகட்டும். சபாக்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு பாடகர் அல்லது பாடகியின் பாட்டுக்கச்சேரி, வயலின் வாசிப்பு ஆகியவை அரங்கேறிக்கொண்டிருக்கும்.
ஆனால் இந்த வருடம் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. சென்னையில் கொட்டித் தீர்த்த மழை சென்னைவாசிகளை மிகவும் பாதித்து விட்டது.
இதனால் டிசம்பர் மாதத்தில் அரங்கேறும் மார்கழிக் கச்சேரிகளை இந்த வருடம் நினைத்து கூடப் பார்க்கமுடியவில்லை. இந்நிலையில் பிரபல பின்னணிப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தனது இசை நிகழ்ச்சிகளை முழுவதும் ரத்து செய்து விட்டதாக அறிவித்திருக்கிறார்.
Dear Freinds and Rasikas, I have cancelled my concerts this Margazhi season. Chennai, which has always supported art, is...
Posted by Bombay Jayashri Ramnath on Sunday, December 6, 2015
இதைப் பற்றி அவர் கூறும்போது " எனது அன்பு நண்பர்கள் மற்றும் ரசிகர்களே இந்த வருடம் மார்கழி இசைக்கச்சேரியை நான் ரத்து செய்து விட்டேன். சென்னை எப்போதும் கலைகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய ஒரு நகரம்.
ஆனால் இந்த வருடம் பெய்த மழையால் சென்னை தற்போது போராடி வருகிறது. மீட்புக் குழுவினரும், தன்னார்வலர்களும் இரவு, பகல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நிறைய மக்கள் வீடுகளை இழந்து அடிப்படைத் தேவைகளுக்கு போராடி வருகின்றனர். நான் நினைக்கிறேன் இது சென்னையின் பண்டிகைக்கான நேரமல்ல.
சென்னை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்போது மார்கழி மாத இசைக் கச்சேரிகள் நடைபெறும்" என்று பாம்பே ஜெயஸ்ரீ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.