ஊருக்கு தான் உபதேசமா: கடுப்பான விக்னேஷ் சிவன் #tsk
சென்னை: வேலைநிறுத்தங்களால் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பை தொடர முடியவில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது. படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று சூர்யாவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விக்கி படப்பிடிப்பு குறித்து ட்வீட் போட்டுள்ளார்.
ஸ்டிரைக்
உழைக்க தயாராக இருந்தாலும் வேலைநிறுத்தங்களால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. ஒற்றுமை, நட்பு என்று சினிமாவில் ஊருக்கே உபதேசம் செய்கிறோம் ஆனால் அதை நாம் பின்பற்றுவது இல்லை என்று ட்வீட்டியுள்ளார் விக்கி.
ஆங்கிலம்
தமிழ் திரையுலக இயக்குனர் தமிழ் படத்தை பற்றி ஆங்கிலத்தில் ட்வீட்டியுள்ளார். இதை பார்த்த பலரும் ஒன்னும் புரியவில்லை தமிழில் ட்வீட் போடுங்க என்று கேட்டுள்ளனர்.
தமிழ்
ஜீ பொசுக்குன்னு இப்படி ஒரு போஸ்ட் போட்டா என்ன னு நாங்க புரிஞ்சிக்கிறது? மக்களுக்கு புரியுற மாதிரி தமிழ் ல போடுங்க.
கமல்
தானா சேர்ந்த கூட்டம் அப்டேட் சொல்லுங்கன்னா கமல் சார் மாதிரி புரியாத மாதிரியே பேசுறீங்களே
ஹீரோ
சார் உங்க ஹீரோ குடும்பத்துல தான் 2 பேர் தயாரிப்பாளர் கவுன்சிலில் இருக்காங்க.. அவர் கிட்ட இத நேரா சொல்லுங்க


Click it and Unblock the Notifications











