Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கோச்சடையான் அட்வான்ஸ் புக்கிங்... மின்னல் வேகத்தில் விற்பனையான டிக்கெட்டுகள்!
சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்துக்கான முன்பதிவு இன்று காலை பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கியது.
தொடங்கிய வேகத்திலேயே அத்தனை அரங்குகளிலும் முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இல்லாத அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து டிக்கெட்டுகள் பெற்று வருகிறார்கள்.
ரஜினியின் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவது தங்கள் தலைவரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்றுதான். முதல் ஷோவுக்கு வாய்ப்பில்லாவிட்டாலும், முதல் நாளுக்குள் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அன்றைக்குள் டிக்கெட்டுகளை வாங்க பல மணி நேரம் க்யூவில் காத்திருக்கவும் தயங்குவதில்லை.
முன்பு எந்திரன் வெளியானபோது, நள்ளிரவு 1 மணிக்கு டிக்கட் கவுண்டரில் ரசிகர்கள் காத்திருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் படம் கோச்சடையான் வெளியாகிறது. இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எப்போது முன்பதிவு தொடங்கும் என காத்திருந்தவர்கள், அறிவிப்பு வெளியான உடனே ஆன்லைனிலும் நேரிலும் டிக்கெட்டுகள் பெற முட்டி மோதினர்.
சத்யம் சினிமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அரங்குகளில் 18 திரைகளில் கோச்சடையான் வெளியாகிறது. இவை அனைத்துமே முதல் மூன்று நாட்களுக்கு ஃபுல். ஓரிரு சீட்டுகள் இருப்பதாக இணையதளத்தில் காட்டப்பட்டாலும், அதை பதிவு செய்ய முயன்றால், டிக்கெட் இல்லை என்றே வருகிறது.
அபிராமி மெகா மால் ஒரு நாள் முன்பே டிக்கெட் விற்பனையை ஆரம்பித்து, அடுத்த மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகளை விற்றுத் தீர்த்தது. இதுவரை ஓடிக் கொண்டிருந்த ஸ்பைடர்மேன் உள்பட அத்தனை படங்களையும் தூக்கிவிட்டு, கோச்சடையானை மட்டும் 4 அரங்குகளிலும் திரையிடுகிறது அபிராமி.
16 திரைகள் கொண்ட மாயாஜாலில் கோச்சடையானை நாளொன்றுக்கு மொத்தம் 64 காட்சிகள் திரையிட்டுள்ளனர். 2டி, 3டி, ஆரோ 3டி என அத்தனை வடிவங்களிலும் இங்கு கோச்சடையானைப் பார்க்க முடியும். முதல் நாளன்று எந்தக் காட்சிக்கும் இந்த அரங்கில் டிக்கெட் இல்லை. சனி, ஞாயிறுகளுக்கும் பெருமளவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
வெளியூர்களில் கோச்சடையான் டிக்கெட்டுகள் பெற ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர்.
தியேட்டர்களைப் பொறுத்தவரை ரஜினி படம் வெளியாவது ஒரு பெரிய திருவிழாவுக்கு சமம் என்பதை கோச்சடையான் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.