Just In
- 7 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 14 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 22 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 59 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- News
கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Sports
கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு, ஜாமீன்ல விடுங்க..' கைதான நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!
கொச்சி: தனக்கு திருமணம் முடிவாகி இருப்பதால் ஜாமீனில் விட வேண்டும் என்று போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகை மனு தாக்கல் செய்துள்ளார்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சள் தண்ணீய ஊத்த மறந்துட்டீங்க பிக்பாஸ்.. டாஸ்க்கை பார்த்து பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் சிலர் கைது செய்யப்பட்டனர். சினிமா துறையை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிரைம் பிராஞ்ச்
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வாகமண் பகுதியின் ரிசார்ட் ஒன்றில் போதைப் பார்ட்டி நடப்பதாக கேரள கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன், அவர்கள் அங்கு சோதனை நடத்தினர். அதில் ஏழு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பிரிஸ்டி பிஸ்வாஸ்
மலையாள சினிமாவைச் சேர்ந்த சில நடிகர், நடிகைகள் வருவதாக இருந்தது. ரைடு பற்றிய தகவல் சென்றதை அடுத்து அவர்கள் தப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தொடுபுழாவைச் சேர்ந்த அஜ்மல் ஜாகீர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் வளர்ந்து வரும் நடிகை, பிரிஸ்டி பிஸ்வாஸ்.

போதைக் கும்பல்
இவர் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் செய்தும் வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிஸ்டிக்கும் போதைக் கும்பலுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது, பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜாமீன் மனு
இந்நிலையில் நடிகை பிரிஸ்டி பிஸ்வாஸ் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் என் நண்பர்களுடன் வாகமண் ரிசார்ட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு போதை பார்ட்டி நடப்பது பற்றி எனக்குத் தெரியாது.

மரிஜுவானா
என்னை, போலீசார் தவறாக கைது செய்துள்ளனர். நான் தங்கிய பகுதியில் இருந்து. 6.5 கிராம் மரிஜுவானாவை கைப்பற்றியுள்ளனர். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண முன் ஏற்பாடுகள் இந்த மாதம் தொடங்குகிறது. என் படிப்பு தொடர்பான புராஜக்ட்டுகளையும் நான் சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது. இதனால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரியா சக்கவர்த்தி
இந்த வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. பாலிவுட்டில் நடிகை ரியா சக்கவர்த்தி உட்பட
சில பிரபலங்களும் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.