Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒரே சமயத்தில் இத்தனை போட்டோவா?...லீக்கான போட்டோக்களால் ஷாக்கில் பொன்னியின் செல்வன் டீம்
சென்னை : இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்தை பிரம்மாண்டமா ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
வரலாற்று காவியமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் 50 கேரக்டர்கள் உள்ளதாகவும், இதில் 15 பேர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. பட ரிலீசிற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வாரிசு - பொன்னியின் செல்வன் படங்களுக்கு இடையே இப்படி ஒரு ஒற்றுமையா?
லைக்குகளை அள்ளும் பாடல்கள்
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பொன்னி நதி பாடலும், செகண்ட் சிங்கிளாக சோழா சோழா பாடலும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு பாடல்களின் மேக்கிங் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.
லீக்கான பிடிஎஸ் போட்டோ
இந்நிலையில் பொன்னியின் செல்வன் செட்டில் ஐஸ்வர்யா ராயின் புதிய பிடிஎஸ் போட்டோ ஒன்று லீக்காகி உள்ளது. இதற்கு முன்பும் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கையில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற உடையில் ராணி கெட்அப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்று லீக்கானது. இதற்கு பிறகு செட்டில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பிடிஎஸ் போட்டோக்கள் லீக்காகவில்லை.
ஒளிப்பதிவாளருடன் ஐஸ்வர்யா ராய்
ஆனால் ஷுட்டிங் முடிந்து படம் ரிலீசாக போகிற சமயத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராயின் பிடிஎஸ் போட்டோ மீண்டும் லீக்காகி உள்ளது. ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி கார்த்தி, விக்ரம், ஜெயராம் ஆகியோரின் பிடிஎஸ் போட்டோக்களும் லீக்கானதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மா உடன் டாப் நடிகர்கள் இருக்கும் போட்டோ தான் தற்போது லீக்காகி உள்ளது. இதை படக்குழு வெளியிடாத நிலையில் யார் இணையத்தில் வெளியிட்டார்கள் என தெரியவில்லை.
ராணி கெட்அப்பில் என்ன அழகு
இந்த போட்டோவில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கெட்அப்பில், கொள்ளை அழகில் காட்சி அளிக்கிறார். பட்டுடையில் நிறைய நகைகளுடன் இருக்கும் ஐஸ்வர்யா ராயின் தோற்றம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.இந்த போட்டோ தாறுமாறாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
அழகிய தோற்றத்தில் வில்லி
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், நந்தினி தேவி மற்றும் மந்தாகினி தேவி என இரண்டு ரோல்களில் நடித்துள்ளார். அழகிய தோற்றத்தில் கொடூர வில்லியாக ஐஸ்வர்யா ராய் எப்படி வில்லித்தனம் செய்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.