Don't Miss!
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சத்யானந்தா படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு

இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
சத்யானந்தாவின் சிறுவயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறிய சூழல், ஆசிரமம் மற்றும் அதற்கு பிராஞ்சுகள் ஆரம்பித்தது, கதவைத் திற காற்று வரட்டும் என உபதேசங்களைத் தொடங்கி, தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டது, கடைசியில் நடிகையுடன் உல்லாசமாக இருந்து கம்பி எண்ணியது போன்றவற்றை நிகழ்வுகளை இந்தப் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்டதுமே தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த மனுவை நீதி்மன்றம் விசாரித்து சத்யானந்தா படத்துக்கு தடை விதித்தது.
தடையை நீக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடிப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்துக்குமே ஆதாரங்கள் உள்ளன. மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் அவை. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர் சத்யானந்தா குழுவினர்.