Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சொத்துக்காக உதவியாளர், நண்பரால் சோனாலி போகத் கொலை..சிபிஜ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
புதுடெல்லி : முன்னாள் நடிகையும் ஹரியானா பாஜக தலைவருமான சோனாலி போகத்தை சொத்துக்காக உதவியாளர், நண்பர் ஆகியோர் கொலை செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
சோனாலி போகத், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
முதற்கட்ட தகவல்களின்படி, சோனாலி போகத் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், இது இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
டிக்டாக் பிரபலம் சோனாலி கொலை வழக்கு..சிபிஐ விசாரணைக்கு மாற்றம்?
உடலில் காயங்கள்
பிரதேச பரிசோதனை அறிக்கையில் அவரது உடல் முழுவதும் பல காயங்கள் இருந்ததால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், சோனாலி போகத்தின் பானத்தில் எம்.டி.எம்.ஏ என்ற போதை பொருளை கலந்து கொடுத்துள்ளனர். இதனால், சோனாலி, தொடர்ந்து இரண்டு மணிநேரம் வாந்தி எடுத்து மயங்கியதாக அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளிவந்தன. இவ்வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
உதவியாளர், நண்பர் கைது
இதையடுத்து, சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் ஆகியோர் அவருக்கு கட்டாயப்படுத்தி போதைப் பொருள் உட்கொள்ள வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சொத்துக்காக கொலை
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வடக்கு கோவாவில் உள்ள மாபுசாவில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிக்கையில், சோனாலி போகத்தின் உதவியாளர் மற்றும் நண்பர்கள் அவரின் சொத்துக்களை அபரிக்கும் நோக்கத்தில் சோனாலிக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்துள்ளதாக சிபிஜ பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
டிசம்பரில் அடுத்த விசாரணை
மேலும் சோனாலி போகத்தின் சொத்தை அபகரிக்கவும் அவரது சொத்துகளை பெற பத்திரத்தில் கையெழுத்தை பெறவும் சங்கவானும் சுக்வீந்தரும் முயற்சித்துள்ளதாக சிபிஜ அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோனாலியின் வழக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரெஸ்டாரண்ட் உரிமையாளர் கைது
சோனாலி போகத் மர்மாக மரணமடைந்த தனியார் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் எட்வின் நுான்ஸ் கோவா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வழக்கு சிபிஜக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!