Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதிமுகவின் 'உண்ணாவிரத போராட்டம்' ஸ்டைலில் போராடிய திரையுலகினர்
சென்னை: மவுன அறவழிப் போராட்டம் என்று கூறிவிட்டு திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர்.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
போராட்டம்
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலக பிரபலங்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஒரு நாள் அடையாள அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மவுன போராட்டம்
இந்த போராட்டம் மவுன அறவழிப் போராட்டம் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் மேடையில் அறிவித்தார். போராட்டத்தில் நடிகர்கள் விஜய், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, சத்யராஜ், சிவகுமார் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விஜய்
மவுன போராட்டத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர். மேடையில் அமர்ந்திருந்த விஜய்யுடன் எஸ்.ஜே. சூர்யா பேசிக் கொண்டே இருந்தார். மற்றவர்கள் மறுபக்கம் பிசியாக பேசினார்கள்.
சும்மா
சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பிரபலங்கள் போராட்ட களத்தில் அனைவரையும் பார்த்ததும் பேசத் துவங்கிவிட்டனர். தொனத் தொனவென பேசுவதற்கு பெயர் மவுன போராட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்ணாவிரதம்
மவுன போராட்டத்தில் திரையுலகினர் பேசியதை பார்த்தபோது காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினர் மூக்கு முட்ட சாப்பிட்டது தான் நினைவுக்கு வருகிறது.