சென்னை: மவுன அறவழிப் போராட்டம் என்று கூறிவிட்டு திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர்.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
போராட்டம்
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலக பிரபலங்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஒரு நாள் அடையாள அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மவுன போராட்டம்
இந்த போராட்டம் மவுன அறவழிப் போராட்டம் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் மேடையில் அறிவித்தார். போராட்டத்தில் நடிகர்கள் விஜய், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, சத்யராஜ், சிவகுமார் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விஜய்
மவுன போராட்டத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர். மேடையில் அமர்ந்திருந்த விஜய்யுடன் எஸ்.ஜே. சூர்யா பேசிக் கொண்டே இருந்தார். மற்றவர்கள் மறுபக்கம் பிசியாக பேசினார்கள்.
சும்மா
சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பிரபலங்கள் போராட்ட களத்தில் அனைவரையும் பார்த்ததும் பேசத் துவங்கிவிட்டனர். தொனத் தொனவென பேசுவதற்கு பெயர் மவுன போராட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்ணாவிரதம்
மவுன போராட்டத்தில் திரையுலகினர் பேசியதை பார்த்தபோது காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினர் மூக்கு முட்ட சாப்பிட்டது தான் நினைவுக்கு வருகிறது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.
Related Articles
திரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல
இந்த ரணகளத்திலும் திரையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது
வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது ஆர்யா...
இந்த குட்டிப் பையன் யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்: குழந்தைகள் தின ஸ்பெஷல்
ஏய்யா ஜடேஜா, நீ அவுட்டாயிருந்தா என்ன கொறஞ்சா போயிருப்ப: குமுறும் பிரபலங்கள்
என்னை நாய் போன்று அடித்ததற்கு நன்றி அப்பா: இப்படியும் தந்தையர் தின வாழ்த்து சொன்ன பிரபலம்
2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள்
கங்கிராட்ஸ் சார்: செவாலியே கமலை நேரில் சந்தித்து வாழ்த்திய சிங்கம், சிறுத்தை, சண்டைக்கோழி
இறந்துவிட்டார் என்றே நம்ப முடியவில்லை: கமல், மம்மூட்டி, பவன் கல்யாண் வேதனை
கல்பனாவின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர், நடிகைகள்
ஆமா, சென்னையில் மழையை நிறுத்த ரஜினி ஏன் எதுவுமே செய்யவில்லை: ராம் கோபால் வர்மா கிண்டல்
அன்புச்செல்வன் ஐபிஎஸ் + டிசிபி ராகவன் = 'என்னை அறிந்தால்' சத்யதேவ் ஐபிஎஸ்
சோறா, படமா?: ட்விட்டரை தெறிக்கவிடும் தமிழர்கள் #NoCauveryNoCinema