Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவங்கள தூக்கிலிடுங்கள், மனிதம் செத்துவிட்டது: பிரபலங்கள் கோபம்
Recommended Video
சென்னை: காஷ்மீரில் 8 வயது சிறுமி திட்டம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை பார்த்து திரையுலக பிரபலங்கள் கொந்தளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் திட்டம் போட்டு கடத்தப்பட்டு கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடத்தி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர்.
|
பலாத்காரம்
பாவம் குழந்தை! அவரை கொடுமைப்படுத்தி கொலை செய்தவர்களுக்கு நரகம் காத்திருக்கிறது. அந்த கயவர்களை தூக்கில் போடுங்கள். எப்படி ஒருவரால் இப்படி மனிதத்தன்மை இல்லாமல் இருக்க முடியும் என ட்வீட்டியுள்ளார் ஹன்சிகா.
|
ராதிகா
இது மனிதத்தன்மையற்ற செயல், இப்படி ஒரு சமூகம் இருப்பதை நினைத்தாலே கொடுமையாக உள்ளது என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
|
ரகுல் ப்ரீத் சிங்
இது மனிதத்தன்மையற்ற செயல், உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற கொடூரன்களுக்கு எந்த தண்டனையும் கடினமாக இருக்குமா என்று வியக்கிறேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
|
ஷ்ரத்தா கபூர்
8 வயது சிறுமியை பட்டினிபோட்டு, போதைப் பொருள் கொடுத்து, பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இது நடந்தது என்றே நம்ப முடியவில்லை. அந்த சிறுமி இந்த கொடுமையை எல்லாம் எதிர்கொண்டுள்ளார் என்கிறார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.#JusticeforAsifa
|
மனிதம்
என் இதயம் நொறுங்கிவிட்டது, மனிதநேயம் செத்துப் போய்விட்டது என்று குமுறியுள்ளார் சுஜா வருணி.