அதர்வாவின் சண்டிவீரனுக்கு யூ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு
சென்னை: நடிகர் அதர்வா - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சண்டிவீரன் படத்திற்கு யூ சான்றிதழை அளித்திருக்கின்றனர், தணிக்கைக் குழுவினர். இயக்குநர் சற்குணம் தஞ்சாவூர் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக எடுத்திருக்கும் திரைப்படம் சண்டிவீரன்.
களவாணி படம் போல சண்டிவீரனையும் மண் சார்ந்த கதையாக எடுத்திருக்கிறார் சற்குணம். முழுப்படமும் எடுத்து முடித்த பின் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு படத்தை அனுப்பியிருக்கின்றனர் படக்குழுவினர்.

முழுப் படத்தையும் பார்த்த தணிக்கைக் குழுவினர் சண்டிவீரன் படத்திற்கு எந்தக் "கட்"டும் கொடுக்காமல், யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சண்டிவீரன் என்று பெயர் வைத்ததால் பயந்து போயிருந்த படக்குழுவினர் படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்ததால் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி சண்டிவீரன் திரையைத் தொடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதர்வாவிற்கு கைகொடுப்பானா இந்த சண்டிவீரன்... பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











