Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சரத்குமாருக்கு கண்டனம்... நடிகர் சங்கத் தேர்தலிலிருந்து விலகினார் வாகை சந்திரசேகர்!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என சங்கத்தின் பொருளாளர் வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல் தொடர்பாக தற்போது சங்க பொருளாளராக இருந்து வரும் வாகை சந்திரசேகர் ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:‘
‘ஒவ்வொரு நடிகருக்கும் நடிகர் சங்கம் தாய் வீடு. அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. நடிகருக்கு அரசியல் என்பது அவருடைய சுதந்திரம். நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவு தேவை. அரசிடம் தங்கள் தேவைகளை கேட்க உரிமை உண்டு. ஆனால், அமைப்புக்குள் அரசியலை நுழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
சங்கத்தின் தலைவரான சரத்குமார், ஜெயலலிதாவின் அரசியலை புகழ்ந்து தள்ளினார். துதி பாடினார். அதோடு நிற்கவில்லை. சட்டப் பேரவையிலும், பொதுக் கூட்டங்களிலும் கருணாநிதியைத் தாக்கிப் பேசினார்.
நான் கருணாநிதியிடம் வைத்திருக்கும் அன்பு, பாசம், விசுவாசம் இவற்றை சீண்டிப் பார்க்கும் எவரோடும் என் பயணம் இருக்காது. எனவே நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.''
இவ்வாறு அந்த அறிக்கையில் வாகை சந்திரசேகர் கூறியிருக்கிறார்.