Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக நடிகை சார்மி ஹைகோர்ட்டில் மனு
ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழுவுக்கு எதிராக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை சார்மி.
போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கூறி நடிகை சார்மிக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக சார்மி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த குழுவினர் சார்மியிடம் வாக்குமூலம் கேட்டதுடன் ரத்த மாதிரி, தலைமுடி, நக மாதிரி கேட்டார்களாம்.
இதனால் சந்தேகம் அடைந்து அவர் நீதிமன்றம் சென்றுள்ளாராம். மேலும் தன்னை பெண் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும் என்று சார்மி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சார்மிக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்று அவர் தந்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.