'இயல் தமிழில் கஞ்சா வளர்த்து அச்சில் விற்பவர்கள்!' - பத்திரிகையாளர்கள் மீது சாருஹாஸன் அட்டாக்
சென்னை: பத்திரிகையாளர்கள் மீது சற்று கடுமையான தாக்குதலை முன் வைத்துள்ளார் கமல் ஹாஸனின் அண்ணன் சாருஹாஸன்.
பத்திரிகையாளர்கள் கஞ்சா மாதிரி செய்திகளைத் தருகிறார்கள். நாம்தான் அவற்றைப் படித்து போதை ஆகிறோம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது சாதாரண விஷயத்தை பூதாகரமாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது கமெண்ட் இது:
"பத்திரிகைக்காரார்கள் இயல்-தமிழில் கஞ்சா வளர்த்து அச்சில் விற்பவர்கள்.. நாம்தான் அதை வாங்கி போதை ஏற்றி கொள்கிறோம்", என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், "கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள்...! பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு பதிலாக 'புரியவில்லை' என்கிறர்கள்..! அம்மாவை உயர்நீதிமன்றம் குற்றவாளி என்றது புரியவில்லையா..? அல்லது பிடிக்கவில்லையா?", என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











