Just In
- 3 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 9 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
- 24 min ago
இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர்.. நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கமல் அஞ்சலி
- 34 min ago
கர்பிணிப் பெண்கள் வீட்டில் நாய் வளர்த்தால் இவ்வளவு நன்மையா!! ரேகா டேன்டேவின் சுவாரசியமான பேட்டி!
Don't Miss!
- News
சல்லிசல்லியான அதிமுக பிளான்.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை.. சசிகலா மீது குவிந்த கவனம்!
- Sports
கோலிக்கு நோ ஸ்பெஷல் கவனிப்பு.. எல்லோருக்கும் இனி ஒரே மரியாதைதான்.. பிசிசிஐ எடுக்கும் முடிவு
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Automobiles
தேசத்திற்கே பெருமை... உற்பத்தியில் '100 மில்லியன்' சாதனை படைத்த ஹீரோ... 6 ஸ்பெஷல் எடிசன் மாடல்களும் அறிமுகம்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எலி படத்தில் மோசடி பண்ணிட்டார்..!- வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை: எலி படத்தில் தன்னை வடிவேலு மோசடி செய்துவிட்டதாகக் கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.
வடிவேலு ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் எலி. இந்தப் படம் பெரிய நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த வடிவேலு தன்னை மோசடி செய்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், ரூ 12 கோடிக்கு இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் வடிவேலுவுக்கு சம்பளமாக மட்டும் ரூ 8 கோடி கொடுத்ததாகவும், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சேனலில் ரூ 10 கோடி வரை தரத் தயாராக இருந்தும் அதனை வாங்க விடாமல் வடிவேலு தடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வேறு சேனல்கள் எதுவும் இந்தப் படத்தை வாங்காமல் விட்டதால், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்துக்குமே வடிவேலுதான் காரணம் என்றும் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.