வில்லன் நடிகர் பொன்னம்பலம் மீது மோசடிப் புகார்- வழக்கு!
வில்லன் நடிகர் பொன்னம்பலம் மீதான மோசடி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த முருகன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், 2011-இல் புதிதாக வாங்கிய காரை நடிகர் பொன்னம்பலம் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு மாதம் ரூ.1500 மாத வாடகைக்கு வழங்கினேன். 2 மாதம் மட்டும் வாடகை தந்தனர். காரை திரும்ப கேட்டதற்கு ரூ.1.50 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர்.

இது தொடர்பாக சிவகாசி போலீஸில் 2014 அக்.14இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி எம்எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











