மழை வெள்ளம் காரணமாக சென்னை திரைப்பட விழா தள்ளி வைப்பு
சென்னை: கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 10-ம் தேதி தொடங்குவதாக இருந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழா அமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில், "சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட மழையினாலும் வெள்ளத்தினாலும், பொதுமக்கள் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலை படிப்படியாக திரும்பி கொண்டிருக்கும் இந்நிலையில் இம்மாதம் 10-ம் தேதி நடக்கவிருந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
புதிய அட்டவணை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications