Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சி2எச் செக் மோசடி வழக்கு... நீதிமன்றத்தில் இயக்குநர் சேரன் மகள்!
சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி தருமபுரி நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
திரைப்பட இயக்குநர் சேரன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திரைப்படங்களை "சிடி' மூலம் வீட்டுக்கே வெளியிடும் வகையில் "டைரக்ட் 2 ஹோம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி (25) செயல்பட்டார். புதிய திரைப்படங்களை வெளியிட இந் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வைப்புத் தொகை பெறப்பட்டு, விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி, தருமபுரி ஆட்சியர் அலுவலகப் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (28) ரூ. 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி தருமபுரிக்கான உரிமம் பெற்றுள்ளார்.
ஆனால், அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக பிரசன்னா கோரியதைத் தொடர்ந்து, ரூ. 4.53 லட்சத்துக்கான காசோலையை நிவேதா பிரியதர்ஷிணி வழங்கியுள்ளார்.
ஆனால் வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பியது. இதையடுத்து, தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் பிரசன்னா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித் துறை நடுவர் ரத்தினவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.