Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சேரனின் சி2எச் திட்டம் தள்ளி வைப்பு.. தியேட்டர்காரர்கள் கேட்டுக் கொண்டதால் எடுத்த முடிவாம்!
இயக்குனர் சேரன் சமீபத்தில் இயக்கியுள்ள படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், ரிலீசாகாமல் நீண்ட நாளாக முடங்கியே கிடக்கிறது.
சேரன், புதுமுயற்சியாக ‘சி2எச்' (C2H) சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம், புதிய திரைப்படங்களை நேரடியாக டிவிடி மூலம் வீட்டிலிருந்தே கண்டுகளிக்கும் வசதியை உருவாக்கி வந்தார்.
இந்த முறையிலேயே நீண்ட நாளாக கிடப்பிலிருக்கும் தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தையும் வெளியிடவிருந்தார்.
வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை சி2எச் திட்டத்தின் மூலம் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.
ஒரு டிவிடிக்கான தொகையான ரூ.50-ல் முன்தொகையாக ரூ.10 மட்டும் கொடுத்து பதிவு செய்து கொள்ளும் திட்டமும் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டிருந்தது. அதற்கு பல ஊர்களில் நல்ல வரவேற்பும் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று சேரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அ
தில் டிவிடி வெளியான அன்றே தியேட்டர்களிலும் படம் வெளியாகும் என்று அறிவித்த தங்களின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்ட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தன்னிடம் பேசி நல்ல முடிவெடுக்க முன்வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில் நல்ல உடன்பாடு எட்டப்பட்ட பிறகு சி2எச் சேவை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.