Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சென்சாராகியும் வெளிவர முடியாமலிருக்கும் படங்களை சிடியாக வெளியிடும் சேரன்!
சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகும் ரிலீசாக முடியாமல் தவிக்கும் 400-க்கும் மேற்றட்ட படங்களை வாங்கி சிடியாக வீடுகளுக்கே சப்ளை செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் சேரன்.
சினிமா டு ஹோம் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் சேரன். தனது 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை இதன் மூலம் ரிலீஸ் செய்கிறார். இத்திட்டம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக இந்த படத்தின் சி.டி.க்கள் நல்ல ஒலித்தரத்துடன் சப்ளை செய்யப்பட உள்ளன. ஒரு சி.டி. விலை ரூ. 50.
பொங்கலையொட்டி வருகிற 14-ந் தேதி படம் வெளியாகிறது. அன்றைய தினம் முதல் நாள், முதல் காட்சியாக வீடுகளில் இந்த படத்தை பார்க்கலாம் என்று சேரன் அறிவித்து உள்ளார். உலகம் முழுவதும் 50 லட்சம் சி.டி.க்கள் வீடுகளில் விநியோகிக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.
தன் படம் மட்டுமல்லாது, சென்சாராகி வெளியில் வராமல் உள்ள 460 படங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து வாராவாரம் சிடியாக வெளியிடப் போகிறாராம் சேரன்.
இந்தப் படங்களில் முடங்கிக் கிடக்கும் சுமார் ரூ 700 கோடி ரூபாயை சேரனின் சி2எச் மூலம் திரும்பப் பெற முடியுமா... பார்க்கலாம்!