Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்! - சேரன்
சென்னை: சிவாஜியின் அரசியல் குறித்த ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன் என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியுள்ளார்.
சிவாஜி கணேசன் மணி மண்டபத் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசிய அரசியல் பேச்சு பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. கடந்த நான்கு தினங்களாக பலரும் அதுபற்றிய தங்கள் புரிதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த விழாவில் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு அரசியல்வாதியாக தோற்றுப் போனது குறித்துப் பேசிய ரஜினிகாந்த், சொந்தத் தொகுதியில் தோற்றது சிவாஜிக்கு தோல்வியல்ல, அந்த மக்களுக்குத்தான் என்று குறிப்பிட்டார்.
மேலும் அரசியலில் ஜெயிக்க புகழ், செல்வாக்கு மட்டும் போதாது, வேறொன்றும் வேண்டும். அது என்ன என்பது மக்களுக்குத்தான் தெரியும் என்றும் ரஜினி கூறினார்.
அவரது இந்த பேச்சு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சேரன், "சிவாஜி அரசியலில் வெற்றியடையாதது மக்களின் தோல்வியே தவிர சிவாஜியின் தோல்வி அல்ல' என்ற ரஜினியின் பேச்சு எவ்வளவு பெரிய உண்மை. அந்த ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன். மக்கள் ஏன் இப்படி சொன்னார் என யோசிக்கவேண்டும். அந்த ஒரு வார்த்தையின் அர்த்தம் புரிந்தால்," என்று கூறியுள்ளார்.