Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நமக்குள் பிளவு வேண்டாம் நடிகர்களே.. சிஐடி சகுந்தலா அழைப்பு
ஈரோடு: நடிகர்களுக்குள் பிளவு ஏற்படக் கூடாது என்று பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கவிதாலயம் இசைப் பள்ளி சார்பில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக் கொண்டார் சகுந்தலா. பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், தேர்தலை வைத்து நடிகர்களுக்குள் பிளவு ஏற்படக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
சிஐடி சகுந்தலாவின் பேச்சிலிருந்து:
600க்கும் மேற்பட்ட படங்களில்
இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என 4 முதலமைச்சர்களுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளேன்.
நடிகர்கள் அரசியலிலும் இருப்பது பெருமை
திரைப்படத்துறையில் இருந்தவர்கள் இன்று அரசியலிலும் முக்கிய இடங்களில் இருப்பது என்னைப் போன்ற திரைப்படக் கலைஞர்களுக்குப் பெருமையான விஷயம். கதையில் கவனம் செலுத்தி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினால் படங்கள் வெற்றியடையும்.
சங்கம் பிரியக் கூடாது
நடிகர் சங்கம் பல வகையிலும் நடிகர், நடிகைகளுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறது. என்னைப் பொருத்தவரை சரத்குமார் அணி, நாசர் அணி என இரு அணிகளாகப் பிரிந்து இருப்பது நடிகர், நடிகைகளைப் பாதிக்கும் என்றே கருதுகிறேன்.
ஒருங்கிணைந்து செயல்படுங்கள்
எனவே எதிர்காலத்தில் இரு அணியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். சினிமா ஒரு கோயில் போன்றது. ஆகவே, நடிகர்களிடம் பிளவு ஏற்படக் கூடாது என்றார். பேட்டியின்போது, கவிதாலயா ராமலிங்கம் உடனிருந்தார்.