Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திரைத் துளி
திருநெல்வேலி:
நில விற்பனை மோசடிகுறித்த வழக்கில் நடிகை ராதாவும், அவரது கணவரும்வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ராதா திருநெல்வேலி ஏர்வாடி அய்யாத்துரைஎன்பவரிடமிருந்து நிலம் வாங்கியிருந்தார். அய்யாதுரை நிலத்தை விற்கும் போது தன்நிலத்திற்கு அருகில் இருந்த ஜப்ருல்லா என்பவரது நிலத்தையும் சேர்த்துவிற்றுவிட்டார்.
இது பற்றி ஜப்ரூல்லா திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி முதலாம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ராதா, அவரது கணவர்ராஜசேகரன் நாயர், அய்யாதுரை ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் கைதுவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
நடிகை ராதாவும் அவரது கணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.ஆனால் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன்ஜாமீன் வழங்கப்படட்து.
அதன் படி வெள்ளிக்கிழமை நடிகை ராதா. அவரது கணவர் ராஜசேகர நாயர்,அய்யாதுரை ஆகியோர் திருநெல்வேலி நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில்ஆஜரானார்கள்.
நீதிபதி கலாவதி, ராதாவுக்கும், அவர் கணவருக்கும் ஜாமீன் வழங்கினார். ஆனால்அவர்கள் அடுத்த மாதம் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டார்.
நீதிமன்றத்தை விட்டு ராதா வெளியே வந்த போது நிருபர்கள் புகைப்படம் எடுக்கமுயன்றனர். புகைப்படம் எடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என ராதாவின் தாய் எச்சரித்தார். ராதாவுக்கு பாதுகாப்பாக ஸ்டண்ட்நடிகர்களும் வந்திருந்தனர்.