ஏய் ராஜன்..தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோதுடா..சவால் விட்ட பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதுடா என பயில்வான் ரங்கநாதன், தயாரிப்பாளருக்கு சவால் விடுத்துள்ளார்.
கட்சிக்காரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன், இந்திய இப்போது வல்லரசாகிவிட்டது, எதற்கு எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டவேண்டிய இருப்பதாக பேசினார்.
அப்போது, அங்கு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமர்ந்திருந்த பயில்வான் ரங்கநாதன், ஜிஎஸ்டியை பற்றி பேசி தயாரிப்பாளர் வீட்டிற்கு ரெய்டு வரவைத்துடுவீர்கள் போல என கேட்டார்.

மாமா பயலே
ஆரம்பத்தில் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்த ராஜன் ஒரு கட்டத்தில், பொறுமையை இழந்து நீ கேள்வி கேட்டு பதில் சொல்வதற்கான மேடை இது இல்லை என்றார். தொடர்ந்து பயில்வான் பேசிக்கொண்டே இருந்ததால் வாக்குவாதம் முற்றி இருவரும் வாடா போடா என பேசிக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக ராஜன், போடா மாமா பயலே, தாய் மார்கள் பற்றி தரக்குறைவாக பேசுற, எப்போதும் பெட்ரூம் பத்தி பேசும் எச்சப்பயல் என பயில்வான் ரங்கநாதனை கடுமையான வார்த்தையால் திட்டினார்.

சரியான லூசு
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன், தயாரிப்பாளர் கே ராஜன் சரியான லூசுப்பய, இசைவெளியீட்டு விழாவிற்கு வருவது செய்தியாளர்கள் தான் அவர்கள் மூலமாகத்தான் படம் விளப்பரப்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கும் போது இது இசைவெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்.

நடிகைகள் பற்றி சொன்னதே அவர்தான்
ராஜனுக்கு 76 வயசு ஆச்சு,அவருக்கு மனைவி, மகன், மருமகள்,பேரக்குழந்தை என அனைவரும் இருக்கிறார்கள். இந்த வயதில் அவர்களுடன் சந்தோஷமாக இருக்காமல், ஹோட்டலில் தங்கிக்கொண்டு மேடையில் கண்டதை பேசி வருகிறார். அதுமட்டும் இல்லாமல், நான் நடிகைகளுடன் காசு கொடுத்து போனேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நடிகைகள் அனைவருமே அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறார்கள் என்று முதலில் சொன்னதே அவர் தான்.

நிரூபிப்பாரா
என்னை பெட் ரூமை ஏட்டிபார்க்கிறேன் என்று ராஜன் சொல்கிறாரே, பெட் ரூம் திறந்து இருந்தால் அடுத்தவர்கள் பார்க்கத்தான் செய்வார்கள். திறந்துவைத்துக்கொண்டு இருப்பது யாருடைய தவறு. நான் இல்லாததை நடக்காததை சொல்லவில்லை. அப்படி நான் பொய் சொன்னேன் என்றால், ராஜன் அதை நிரூபிக்கட்டும்.

கேவலமா இல்லையா?
அதே போல எந்த இசைவெளியீட்டு விழாவிற்கு வந்தாலும் 5 ஆயிரம், 15 ஆயிரம் என காசு வாங்கிக்கொண்டுதான் பேசுகிறார். ஒரு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் காசு வாங்கிக்கொண்டு விழாவிற்கு வருவது கேவலமா இல்லையா? அன்னைக்கு மட்டும் யாரும் தடுக்காமல் இருந்து இருந்தால், ராஜன் நிலைமை மோசமாக ஆகியிருக்கும்.

டேய் ராஜன்
அது மட்டும் இல்லாமல், ஒரு நடிகை என்னை அடித்துவிட்டதாக பேசி வருகிறார். டேய் ராஜன் இந்த நிகழ்ச்சியில் உனக்கு சவால் விடுகிறேன்டா. அந்த நடிகை மட்டும் என்னை அடித்தது உண்மை என்று நீ நிரூபித்துவிட்டால் நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். ஆனால், நீ நிரூபிக்கவில்லை என்றால், மேடையில் பேசுவதை நிறுத்திவிட்டு வாயை போத்திக்கொண்டு போ வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











