Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உறவினரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கிரகலட்சுமியை விடுவிக்க முடியாது - நீதிமன்றம்
சென்னை தியாகராயர்நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர்களுக்கு பொன்குமார், நாகராஜ் ஆகிய மகன்களும், கிரகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். (நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி).
இந்த நிலையில் பொன்குமாரின் மனைவி அபிராமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் பொன்குமார், மாமியார் சிவகாமிசுந்தரி, நாத்தனார் கிரகலட்சுமி, கணவரின் சகோதரர் நாகராஜ் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுலை 20-ந் தேதி, அபிராமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொன்குமார், நாகராஜ், சிவகாமிசுந்தரி, கிரகலட்சுமி உட்பட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நாகராஜ், கிரகலட்சுமி உட்பட 5 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி சேதுமாதவன் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.