Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிர்வாண போஸ்டர்.. ஆமீர்கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
ஜபல்பூர்: நிர்வாண போஸ்டர் விவகாரத்தில் நடிகர் ஆமீர் கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது ஜபல்பூர் நீதிமன்றம்.
நடிகர் ஆமீர்கான 'பிகே' என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
ரயில் தண்டவாளத்தில் நின்றபடி பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக் கொண்டு ஆமீர்கான் நிர்வாணமாக இருப்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெரு நகரங்களில் பொது இடங்களிலெல்லாம் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இணைய தளங்களிலும் இந்த போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் நாடு முழுவதிலும் பரபரப்பைக் கிளப்பின. அத்துடன் இது ஆமீர் கானின் சொந்த சரக்கல்ல, ஒரு போர்ச்சுகல் இசையமைப்பாளர் எழுபதுகளில் தனது ஆல்பத்துக்கு வடிவமைத்ததை காப்பியடித்துவிட்டார் என்ற சர்ச்சையும் கிளம்பியது.
இந்தப் படத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் 'பிகே' பட நிர்வாண போஸ்டர் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நடிகர் ஆமீர்கான், படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி, தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா உள்பட 10 பேர் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆமீர்கான் உள்பட 10 பேர் மீதும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.