Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காதல் முறிவுக்கு பின் மீண்டும் நயனுடன் இணையும் பிரபுதேவா... ‘மறுபடியுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்!
ஐதராபாத் : மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் லூசிபர். இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்காக காட்ஃபாதர் படம் உருவாகி வருகிறது. மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
கெட்டவனாக நடிக்கும் மம்முட்டி... மலையாளத்திற்கும் தொற்றிய வில்லன் கேரக்டர் மோகம்!
லூசிபர் படம்
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் லூசிபர். இந்தப் படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிரட்டலான கதைகக்களத்துடன் வெளியானது. இதையடுத்து தன்னை மிகச்சிறந்த இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்டார் பிரத்வி ராஜ்.
2வது பாகத்திற்கு கோரிக்கை
இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் விரைவில் அந்தப் பணியில் ஈடுபட ரசிகர்கள் பிரித்விராஜூக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் நேரடியாக பிரித்விராஜூக்கு இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார். அந்த அளவிற்கு லூசிபர் படம் தன்னை கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தெலுங்கில் ரீமேக்
இந்நிலையில்வ இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் பிரபல இயக்குநர் மோகன் ராஜா. இதன்மூலம் அவர் தெலுங்கிற்கும் சென்றுள்ளார். படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். நடிகை நயன்தாரா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பாடலுக்கு பிரபுதேவா நடனம்
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரவுதேவா நடனம் அமைத்துள்ளார். இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையில் ஒருகட்டத்தில் காதல் இருந்தது. ஆனால் அந்த காதல் சில காரணங்களால் முறிவுக்கு உள்ளானது. இதனிடையே நயன்தாரா இந்தப் படத்தில் நடித்துவரும் நிலையில் பிரபுதேவா நடனம் அமைப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபுதேவா -நயன்தாரா காதல் முறிவு
ஆனால் இந்தப் பாடலல் நயன்தாரா ஆடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா. தொடர்ந்து அவரது இயக்கத்தில் படங்களிலும் நடித்தார். அதைதொடர்ந்தே அவர்களது காதல் முறிவுக்கு உள்ளானது.
பன்முகம் காட்டும் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா தொடர்ந்து நடன இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என இந்திய அளவில் பன்முகம் காட்டி வருகிறார். தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் தேள் படம் வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதேபோல நயன்தாராவும் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.