Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
திரைத் துளி
காயம்பட்ட தனுஷூடன் தந்தை கஸ்தூரி ராஜா, தாயார் விஜயலட்சுமி |
உற்சாக மிகுதியால் ரசிகர்கள் கீழே தள்ளியதால் கை எலும்பு உடைந்த தனுஷ் இன்னும் ஒரு வாரத்தில்குணமடைவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர் கூறினார்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றிருந்த தனுஷ் நேற்று சென்னைதிரும்பினார். தி.நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள தனது அலுவலகம் சென்றார். அப்போது அவரைப்பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு காத்திருந்தனர்.
அவர்களுடன் பேசுவதற்காக அருகில் இருந்த மைதானத்தை ஒட்டி உள்ள சிமென்ட் மேடையில் ஏறினார் தனுஷ்.ரசிகர்களும் ஏறினர். அப்போது அவருடன் கை குலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதில் தடுமாறி கீழே விழுந்ததனுஷ், படிக்கட்டுகளில் உருண்டார். சில ரசிகர்களும் அவர் மீது விழுந்தனர்.
இதில் அவரது கையின் மேல் பகுதியில் விலா அருகே எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.
அவருக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் கோகுல் கிருஷ்ணா கூறுகையில், இது சாதாரண எலும்பு முறிவுதான்.இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அவர் முற்றிலும் குணமடைந்து விடுவார். அதற்குப் பிறகு வழக்கம்போல அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றார்.
காயம்பட்ட கையில் பயங்கர வலி இருப்பது தனுஷின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. வலியைப் பொறுத்துக்கொண்டே செய்தியாளர்களை சந்தித்தார் தனுஷ். ரசிகர்கள் மேல் தனக்கு கோபமோ,வருத்தமோ இல்லை என்றும்,இது எதிர்பாராமல் நடந்து விட்ட சிறிய விபத்து என்றும் புன்னகையுடன் தெரிவித்தார்.
ஆனால் தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூ ராஜாவோ, ரசிகர்களின் செயல் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.இந்த சம்பவம் திடீரென்று நடந்து விட்ட ஒன்று. ரசிகர்களின் வேகம் எனக்கு மிகுந்த அதிருப்தியை அளித்தது.இதுபோன்ற வெறித்தனம் கூடாது என்றார்.